ஜூலை 1 முதல் பள்ளிகளை திறப்பது இறுதி முடிவல்ல – மாநில அரசு அறிக்கை!!
தெலுங்கானா மாநில அரசு வரும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது என்று அறிவித்த நிலையில் அது இறுதியான முடிவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
மாநில அரசின் பதில்:
வரும் ஜூலை 1ம் தேதி முதல் தெலுங்கனா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்கப்படுவதாக மாநில கல்வித்துறை அரசாணை வெளியிட்டது தொடர்பான மாநில உயர்நீதிமன்றம் அதிருப்தி முடிவில், கல்வித் துறை செயலாளரை பதில் அளிக்க உத்தரவிட்டது. நீதிபதி கோஹ்லியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக கல்வித் துறை செயலாளர் சந்தீப் குமார் சுல்தானியா, இது இறுதியான முடிவு அல்ல என்றும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகளை நடத்த அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.
தமிழக முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை!
மேலும், முதல்கட்டமாக ஜூலை 1ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், உயர் வகுப்புகளுக்கு ஆஃப்லைன் வகுப்புகள் தொடங்கினால் மாணவர்களை கட்டாயம் வருகை தர நிர்பந்திக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வகுப்புகளின் போது கூறப்பட்டது போல் மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
TN Job “FB Group” Join Now
நேரடி வகுப்புகள் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு இன்னும் இரண்டு நாட்களில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் சுல்தானா தெரிவித்தார். நேரடிக்கு வகுப்புகள் 1 முதல் 7ம் வகுப்பு வரை தற்போதைக்கு தொடங்க வேண்டாம் என்று ஆலோசனைகள் வருவதாகவும் கூறினார். மேலும், நீதிமன்றம் மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றிய அரசின் நிலைப்பாட்டை விரைவில் சமர்ப்பிக்க கூறியுள்ளது.