மத்திய அரசின் கல்வி & வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!
நாட்டில் குறிப்பிட்ட பிரிவினருக்கான சமூக அந்தஸ்து மற்றும் மேம்பாட்டிற்கு உதவியாக அரசு அளித்து வரும் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நாளை (07.11.2022) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தீர்ப்பு நாள்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் பின்தங்கியுள்ள மக்களின் நிலையை உயர்த்தும் பொருட்டு, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட அளவிலான இடஒதுக்கீட்டினை அளித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் புகார்கள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பி வருவது வழக்கம்.
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படியா? புரட்டி எடுக்கவுள்ள கனமழை! வானிலை எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொது பிரிவு மக்களுக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது தொடர்பாக 40 எதிர்ப்பு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 8ம் தேதி அன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிபதிகள், மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தனர். இறுதியாக செப்டம்பர் 27ம் தேதி அன்றைய தினத்தில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 7ம் தேதி ஆகிய நாளை வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.