தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு இப்படியா? புரட்டி எடுக்கவுள்ள கனமழை! வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் ஏற்கனவே வட மாவட்டங்களில் அதிக மழை பெய்து வரும் நிலையில், இனி வரும் அடுத்த 4 நாட்கள் இதேபோல், தென் மாவட்டங்களிலும் அதிக மழை பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் கன்னியாகுமரியில் அதிக பட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 8 செமீ மழை பொழிவும், குறைந்த பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கத்தில் 1 செமீ மழை பொழிவும் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்து வர இருக்கும் 5 நாட்களுக்கு இலங்கையின் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்க நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கி தவிக்கும் டெல்லி.. இந்த செயல்பாடுகளுக்கு தடை – மீறினால் ரூ.15 லட்சம் அபாரதம்!
Exams Daily Mobile App Download
குறிப்பாக, குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நாளை முதல் 10ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இடி, மின்னலின் பாதிப்பும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.