தமிழக அரசின் 10.5% இடஒதுக்கீடு – உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை பிற பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தவர்கள் போன்றோர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதே போல வன்னியர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டி பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், அதனுடன் தொடர்புடைய வன்னியர் சங்க அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO முக்கிய அறிவிப்பு!
அதன்படி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% சிறப்பு இடஒதுக்கீடு அமலானது. இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் நடப்பு ஆண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் காலியிடங்கள் இருப்பின், அதனை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களை கொண்டு நிரப்பலாம் என்று தமிழக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒரு பிரிவில் ஏற்படும் காலியிடங்களை, மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்களை கொண்டு சுழற்சி முறையில் நிரப்பலாம். தென் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவில் காலியிடங்கள் இருப்பின் அதனை வன்னியர்கள் மூலம் நிரப்பலாம் என்றும் தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.