தமிழக அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவது குறித்த விவரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

அரசு உதவித்தொகை:

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதை தொடர்ந்து படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதனை தொடர்ந்து புதுப்பித்திருப்பதும் அவசியமாகும். வயது வரம்பு மற்றும் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் புதன்கிழமை (அக்.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையானது முறையாக 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம் வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600- வீதம் 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கடன் வழங்க அனுமதி!

அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதந்தோறும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் பத்தாண்டு காலத்துக்கும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையானது நேரடியாக ஆதாா் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார். மேலும் விவரங்களை அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!