10, 15 ஆண்டுகள் பழைய வாகனங்களை இயக்க தடை – அரசு அறிவிப்பு!
தலைநகர் டெல்லியில் டெல்லியில் 10,15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை இயக்கினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
10,000 ரூபாய் அபராதம்:
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசடைதல் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாசடைந்த கற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். டெல்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகன பெருக்கம் ஆகியவை காரணமாக காற்று மாசடைகிறது. வாகன தொழிற்சாலை கழிவுகளால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைகிறது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இந்த காற்று மாசுபட்டால் பலருக்கும் ஒவ்வாமை ஏற்படுகிறது.
தமிழக அரசு சார்பில் புதிய சூப்பர் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
எனவே வாகனங்களை முறையாக பராமரித்து புகை இல்லாமல் இயக்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக ஆண்டுகள் வாகனங்களை பயன்படுத்தும் போது அதன் உதிரி பாகங்கள் பழுதடைந்து விடுகிறது. இதனை சரி செய்யா விட்டால் வாகனத்தை ஓட்டும் போது அதிகளவு புகை வெளிப்படுகிறது.10, 15 ஆண்டுகள் பயன்படுத்திய வாகனங்களில் உறுதி பாகங்களை மாற்றினாலும் வாகனம் சீரற்ற தன்மையை இழந்து விடுகிறது. அதனால் வெளியாகும் புகை காற்றில் கலந்து மாசடைய செய்கிறது.
TN Job “FB Group” Join Now
இதை தடுப்பதற்காக டெல்லி போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் 10, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை இயக்கினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களையோ, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களையோ இயக்கினால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதனை மீறியும் பழைய வாகனங்கள் இயக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.