திட்டமிட்டபடி 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் – மாநில அரசு அறிவிப்பு!!
ஆந்திர மாநிலத்தில் திட்டமிட்டபடி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோல சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுதேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்தி வைப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இதனால் பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்காமல், திட்டமிட்ட தேர்வு அட்டவணைகளின் படி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஜூன் 7ஆம் தேதி துவங்கி ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கான இன்டெர்னல் தேர்வுகளும் மே 6ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.