வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!

0
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் - அரசு அறிவிப்பு!!
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் - அரசு அறிவிப்பு!!
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!

டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

டெல்லியில் ஒரே நாளில் 17000க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கிடுகிடு உயர்வு காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர், இதனால் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – தலைநகரில் போராட்டம்!!

இது குறித்து டெல்லி முதல்வர் கூறுகையில், “டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதால் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வர வேண்டும். ஷாப்பிங் மால்கள், ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்படும். திரையரங்குகளில் 30% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படாது. பார்சல் மூலமாக மட்டுமே உணவு வழங்கப்படும்”, இவ்வாறு தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!