தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – விரைவில் பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வருகிற 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று திமுக அமைப்பு செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி 19ம் தேதி அன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு கூடுதல் வட்டி!
இந்த தேர்தலுக்கான முடிவுகள் 22ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்து தமிழகத்தில் 268 மையங்களில் வாக்குகள் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் தேர்தலை மேலும் கொரோனா பரவாத தேர்தலாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறும்.
Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய திட்டம் அறிமுகம்!
இதனை கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சென்னையை அடுத்த செங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அமைப்பு செயலாளர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். இதில் கூறியதாவது, தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து வருகிற பட்ஜெட்டில் தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் பெண்கள் இதனை மாதந்தோறும் வங்கிகளில் பெற்று கொள்ளுமாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.