தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிதியுதவி அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் சிறுவர்கள் குளம் ஏரிகளில் குளிக்க செல்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சிறுவர்கள் உயிரிழக்கும் சோக சம்பவங்கள் நடந்துள்ளது. அது குறித்த செய்தி வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிஸ்லெரி நிறுவன பங்குகளை வாங்கும் திட்டத்தை கைவிட்ட டாடா நிறுவனம் – வெளியான அப்டேட்!
அதன் படி சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் குளிக்க சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download