பிஸ்லெரி நிறுவன பங்குகளை வாங்கும் திட்டத்தை கைவிட்ட டாடா நிறுவனம் – வெளியான அப்டேட்!
இந்தியாவில் மினரல் வாட்டர் என்றாலே நமது நியாபகத்திற்கு வருவது பிஸ்லெரி தான். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது அதை முற்றிலுமாக நிறுத்தி இருப்பதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.
பிஸ்லெரி நிறுவனம்
இந்தியாவில் பிரபலமான மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லெரியின் நிறுவன பங்குகளை டாடா குழுமம் வாங்க இருப்பதாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. டாடா குழுமத்தின் கீழ் இயங்கிவரும் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் (Tata Consumer Products) நிறுவனம் FMCG நுகர்பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் பிஸ்லெரி நிறுவனத்தின் பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது பிஸ்லெரி நிறுவன பங்குகளை வாங்குவது குறித்த வாய்ப்புகளும் பேச்சுவார்த்தைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இரு நிறுவனங்களும் எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என டாடா குழுமம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிஸ்லெரி நிறுவனத்தில் சுமார் ரூ. 8250 கோடி முதலீடு செய்வதாக டாடா திட்டமிட்ட நிலையில் பங்குகள் மதிப்பீடு பிரச்சனை காரணமாக இந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download