மார்ச்.29 ( புனித வெள்ளி) அன்று வங்கிகள் செயல்படுமா?- வாடிக்கையாளர்கள் குழப்பம்!

0
மார்ச்.29 ( புனித வெள்ளி) அன்று வங்கிகள் செயல்படுமா

மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்தான அட்டவணை முன்னதாகவே வெளியிடப்பட்டிருக்கும் நிலையிலும் நாளைய தினம் வங்கிகள் செயல்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் குழப்பங்கள் எழுந்துள்ளது.

புனித வெள்ளி:

இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை மற்றும் குறிப்பிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை குறித்த அனைத்து அட்டவணையையும் ஆண்டு தொடக்கத்திலேயே வெளியிட்டு விடுகிறது. அந்த வகையில் நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மாதத்தின் இறுதி பகுதியை எட்டியுள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதியான நாளை புனித வெள்ளி பண்டிகை வரவுள்ளது. இதனால் நாளை வங்கிகள் செயல்படுமா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு.. ஏப்ரல் 1 முதல் அமல் – வெளியான முக்கிய தகவல்!

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி மார்ச் 29ஆம் தேதியான நாளை புனித வெள்ளி அன்று திரிபுரா, அசாம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வணிக காரணங்களுக்காக அரசு கணக்குகளை கொண்டுள்ள இந்திய வங்கிகள் செயல்படுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!