அரசின் நலத்திட்டங்களை பெறுவது இனி ரொம்ப ஈஸி – விவசாயிகளுக்கு உதவும் புதிய இணையதளம்! விவரம் இதோ!
தமிழக விவசாயிகள் அரசின் நல திட்டங்களுக்கு விண்ணப்பிக்க உதவும் வகையில் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து விவரங்களை பதிவில் காண்போம்.
இணையதளம்:
தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் நல திட்டங்களில் சேர்ந்து பயன் பெற வேண்டுமெனில் தனித்தனியாக ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அதாவது விவசாயிகள் இயற்கை பேரிடர் நிவாரணம் பயிர் கடன் ஊக்கத்தொகை, உதவித்தொகை உள்ளிட்டவைகளை பெற தனித்தனி அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பதை தடுக்கும் வகையிலும் காலம் நேரத்தை குறைக்கும் நோக்கிலும் GRAINS என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த இணையதளம் வாயிலாக அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் 13 க்கும் மேற்பட்ட துறைகளின் நலத்திட்டப் பலன்களை விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.