TNPSC குரூப் 4 தேர்வு எப்போது? – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி குரூப் 4 பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த முறை சுமார் 6244 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த முறை சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அப்டேட்.. இது ஒன்னு போதும் – முழு விவரம் இதோ!
இந்த தேர்வானது ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சி யின் அதிகாரப்பூர இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.