50 சதவீத அரசு பேருந்துகள் இயங்க தயார் நிலை – மண்டல போக்குவரத்து அதிகாரி!
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வரும் நாட்களில் தளர்வுகள் அளிக்கப்பட உள்ள நிலையில், 50 சதவீத அரசு பேருந்துகள் இயங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் 27 மாவட்டங்களில் படிப்படியாக குறைந்துள்ளது. அரசு தற்போது விதித்துள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 21ம் தேதி வரை அமலில் இருக்கும். இதன் பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழக முதல்வர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாதிப்புகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 50% பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் 20% சம்பள உயர்வு – மாநில அரசு ஒப்புதல்!
இதனால் பாதிப்புகள் குறைவாக மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை பணிக்கு அழைத்து பேருந்துகளை இயக்கி தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 10ம் தேதி முதல் பேருந்துகள் இயங்காமல் உள்ளதால் பழுதாக வாய்ப்புள்ளது. இதனால் பேருந்துகள் இயக்கம், என்ஜின் சரிபார்ப்பு, டயர்களில் காற்றின் அளவு சரிபார்ப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து வேலூர் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50% பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அரசு, பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்புகளை வெளியிடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 10 பணிமனைகளில் உள்ள 250 பேருந்துகள் முதல்கட்டமாக இயங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.