பிரபல ப்ரைம் டைம் சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய ஹீரோயின் – ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மோக்ஷிதா, தற்போது சீரியலை விட்டு விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
நடிகை விலகல்:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆர்யன் நடிப்பில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியல். இந்த சீரியலில் பிரபல சினிமா நடிகை அர்ச்சனா முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் விலக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது சக்தி கதாபாத்திரத்தில் கதையின் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மோக்ஷிதா தற்போது சீரியலை விட்டு விலக இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் இந்த சீரியல் மட்டுமில்லாமல் மற்றொரு மொழி சீரியலில் செம்பருத்தி சீரியல் ரீமேக்கில் பாரூ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களால் சீரியலை விட்டு விலகுவதாக தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவருக்கு பதிலாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.