ஜீ தமிழ் சேனலின் ப்ரைம் டைம் சீரியல்கள் ஒளிபரப்பு நேரம் அதிகரிப்பு – ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஜீ தமிழ் டிவியில் தற்போது இரவு நேர ப்ரைம் டைம் தொடர்களின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றிய அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தங்களுக்கு விருப்பமான தொடர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
ப்ரைம் டைம் சீரியல்கள்:
முன்னணி நிறுவனங்களான சன்டிவி மற்றும் விஜய் டிவியின் சீரியல்கள் மட்டுமே மிகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல்களும் மக்களை கவர தொடங்கியுள்ளது. பல சீரியல்கள் ஜீ தமிழில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதில், தற்போது ப்ரைம் டைம் தொடர்களாக செம்பருத்தி, நீதானே என் போன் வசந்தம், புது புது அர்த்தங்கள் போன்றவை மாற்றப்படுகிறது. இதில் முக்கிய விஷயமாக இந்த தொடர்களின் நேரம் அதிகரிக்கப்பட்டு 45 நிமிடங்கள் ஒளிபரப்ப இருக்கிறது.
SSC JE (EEE) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜீ தமிழ் சர்வதேச அளவிலான நிகழ்ச்சியான சர்வைவர் ஷோ தொடங்கப்பட்டது. திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். மிகவும் சவாலான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் மத்தியில் போட்டி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மொத்தம் 90 நாட்கள் நிகழ்ச்சி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இன்றுடன் சர்வைவர் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை – ஜன.1 முதல் அமல்! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!
இதனால் நாளை முதல் சீரியல்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு, புதுப்புது அர்த்தங்கள் இரவு 8:30 மணி முதல் 9:15 மணி வரையும், செம்பருத்தி 9:15 மணி முதல் 10 மணி வரையும், நீ தானே என் பொன் வசந்தம் இரவு 10 முதல் 11 மணி வரையும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகத்தில் அறிவித்துள்ளது. மேலும், ரஜினி மற்றும் வித்யா நம்பர் 1 என்ற இரண்டு சீரியல்கள் புதிதாக அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜீ தமிழ் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.