ஆகஸ்ட் 3 வரை கனமழை காரணமாக ‘மஞ்சள்’ அலெர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை
கோடைக்காலம் முடிவுக்கு வந்த கையோடு பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் மழைப்பொழிவை காண முடிகிறது. இவ்வாறு பெய்து வரும் தொடர் மழையால் அம்மாநிலங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை கேரள மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது தென் மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது அடுத்து கேரளாவிலும் வருகிற புதன்கிழமை வரை பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு? லேட்டஸ்ட் அப்டேட்!
அதனால் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உண்டாகும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுவதற்கும் அதிகளவு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.