பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘MORTHIndia’ திட்டம் – மத்திய அமைச்சர் தகவல்!
நாட்டில் பொது போக்குவரத்துகளில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது MORTHIndia என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
MORTHIndia
தற்போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல வகையான திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக பெண்கள் பொது போக்குவரத்துகளில் பாதுகாப்பாக செல்வதற்காக பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் MORTHIndia என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திட்டம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது, MORTHIndia திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் வாகன கண்காணிப்பு தளத்தை மேம்படுத்துதல், நிர்வகித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பான இணையதளத்தை வடிவமைத்தல், மேம்பாடுத்துதல் உள்ளிட்டவைகளையும் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ICICI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ், AIS-140 விவரக்குறிப்புகளின்படி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கட்டுப்பாட்டு மையம் அல்லது கண்காணிப்பு மையம் அமைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.