அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு – காரணம் இதுவா? வெளியான ஷாக் நியூஸ்!

0
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - காரணம் இதுவா? வெளியான ஷாக் நியூஸ்!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - காரணம் இதுவா? வெளியான ஷாக் நியூஸ்!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு – காரணம் இதுவா? வெளியான ஷாக் நியூஸ்!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாத கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 446 பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் சில விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதனால் விடைத்தாள் திருத்த வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகள் ஒப்படைக்காத கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகளும், விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்துகொள்ளாத தனியார் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளும், தேர்வு கட்டணங்களை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்காத கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!