தமிழகத்தில் கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதி? ஜூன் 7க்கு பின் தளர்வுகள் இருக்குமா!

0
தமிழகத்தில் கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதி? ஜூன் 7க்கு பின் தளர்வுகள் இருக்குமா!
தமிழகத்தில் கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதி? ஜூன் 7க்கு பின் தளர்வுகள் இருக்குமா!
தமிழகத்தில் கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதி? ஜூன் 7க்கு பின் தளர்வுகள் இருக்குமா!

தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உலா தளர்வில்லா முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

ஊரடங்கு தளர்வுகள்

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதத்தில் உச்சம் அடைந்த கொரோனா தொற்றின் மூலம் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் மாநிலங்கள் தோறும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது தினசரி ஒன்றரை லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாநிலங்கள் தோறும் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதே போல தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலமாக கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்து வருகிறது. முன்னதாக மே 10 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு, தற்போது தளர்வில்லா பொது முடக்கமானது ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் வரை கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்தபடி, ஜூன் 7 ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வருவதால், அதற்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா, அல்லது சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – மாநில அரசுகள் அறிவிப்பு!

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்ல முடியாது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கு தளர்வுகள் குறித்து வெளியான தகவல்களின் படி, நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில் காலை 10 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் செயல்படலாம். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து சேவைகள் துவங்குவதற்கு வாய்ப்பில்லை எனவும் ஆட்டோ மற்றும் டாக்சிகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!