தமிழகத்தில் மக்கள் தங்களுடைய சொத்துக்களை விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்க உயில் எழுதுவது வழக்கம். இந்த உயில் எழுதுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என இந்த பதிவில் பார்க்கலாம்.
உயில் வழிமுறைகள்
ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தான் இறந்த பின் யாருக்கு கொடுக்க வேண்டும் என இறப்பதற்கு முன்னதாகவே எழுதுவது தான் உயில் பத்திரம். இந்த பத்திரத்தை முழுக்க முழுக்க சுய நினைவுடன் மட்டுமே எழுத முடியும். மேலும் உயில் எழுத சில விதிமுறைகள் உள்ளது. அதாவது உயிர்கள் வாரிசுகளுக்கு மட்டும் எழுத வேண்டும் என்பதில்லை. தனக்கு விருப்பமான யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம்.
CSEET 2024 தேர்வு விண்ணப்பதிவு தொடக்கம் – தேர்வுகள் ஜூலை 6ம் தேதி !!
ஒருவேளை வாரிசு இருந்தும் அவரைத் தவிர வேறு யாருக்காவது எழுதி வைத்தால் வாரிசுகளால் அதை கேள்வி கேட்கவோ எதிர்க்கவோ முடியாது. அதேபோல வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவி அதில் உரிமை கேட்க முடியாது. அப்படி தேவை இருந்தால் மனைவிக்கு ஒரு பங்கு சேர்த்து எழுத வேண்டும். இல்லையென்றால் மனைவியை நாமினியாக நியமிக்கலாம். அதேபோல ஒருவர் தான் சம்பாதித்த சொத்தை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும் பூர்வீக சொத்துக்கு உயில் எழுத முடியாது. உயிர் எழுதும் போது இரண்டு சாட்சி கையெழுத்து அவசியம் அதாவது ஒன்று வக்கீல் மற்றும் டாக்டர் கையெழுத்து அவசியம்.