மீண்டும் வேகமெடுக்கும் மற்றொரு தொற்றுநோய்…… அச்சத்தில் உலக நாடுகள்…
தற்போது பல்வேறு உலக நாடுகளில் கக்குவான் இருமல் நோய் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளன. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
கக்குவான் இருமல்:
பெர்டுசிஸ் என்று அழைக்கப்படும் கக்குவான் இருமல் குழந்தைகளை அதிகமாக தாக்கி வருகிறது. இதை இது ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம் என்பதால் தொற்று தீவிரம் அடைந்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக சீனா, அமெரிக்கா. பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இந்த ஆண்டில் 32,350 பேருக்கு கக்குவான் இருமல் கண்டறியப்பட்டுள்ளது. கடந்தஆண்டுடன் ஒப்பிடும்போது 20 மடங்கு அதிகம். ஜனவரி முதல் மார்ச் வரையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் . அதேபோல பிலிப்பைன்ஸ் மூன்று மாதங்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
Follow our Instagram for more Latest Updates
இதன் அறிகுறிகள் சாதாரண ஜலதோஷம் போல் ஆரம்பித்து அதன் பின் மூக்கடைப்பு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும். ஒன்று இரண்டு வாரங்களுக்கு பின் அறிகுறிகள் தீவிரமடையும். பத்து வாரங்கள் வரை இது நீடிக்கும். இதனால் குழந்தைகள் தான் அதிக பாதிப்படைந்துள்ளனர். சில நேரங்களில் இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவில் இருமல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருமல் துவங்குவதற்கு முன் நோய் கண்டறியப்பட்டால் ஆன்டிபயாட்டிக் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த சீனாவில் குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் ஏழு வயது உள்ளவர்களுக்கு 7 வயது மேற்பட்டவர்களுக்கு என தனித்தனியாக தடுப்பூசிகள் போடப்பட்டு நோயை கட்டுப்பாட்டுகள் கொண்டு வர உலக நாடுகள் திணறி வருகின்ற