நாட்டில் பணவீக்கத்தின் சரிவால் விலைவாசி குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0
நாட்டில் பணவீக்கத்தின் சரிவால் விலைவாசி குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
நாட்டில் பணவீக்கத்தின் சரிவால் விலைவாசி குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி!
நாட்டில் பணவீக்கத்தின் சரிவால் விலைவாசி குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக பணவீக்கத்தின் விகிதம் மிகவும் சரிவடைந்ததால் அனைத்து பொருட்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி குறைவு

நாட்டில் பங்குச் சந்தையில் ஏற்படும் பணவீக்கத்தை பொறுத்துதான் கச்சா எண்ணெய், ஜவுளிகள், உணவு அல்லாத பொருட்கள், இயற்கை எரிவாயு ரசாயன பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் தீர்மானம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பண வீக்கத்தின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால் விலைவாசி குறைந்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்களின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேம்பாட்டு துறை பணவீக்கத்தின் விகிதம் தொடர்பான முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

CSIR UGC NET தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

அதாவது, மே மாதத்தில் உணவு பொருட்களுக்கான பண வீக்கம் 1.59 சதவீதமாகவும், முதன்மை பொருட்களுக்கான பண விகிதம் 1.75% மும், எரிபொருள் மற்றும் மின்சாரப் பொருட்களின் பணவீக்கம் 9.17 சதவீதமும் குறைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு பொருட்கள், ஜவுளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு என அனைத்து பொருட்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!