தமிழகத்தில் பரவும் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறை எப்போது? – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!
தமிழகம் முழுவதும் தற்போது பலவிதமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சலசலப்பு எழுந்துள்ளது.
காய்ச்சல் பாதிப்புகள்:
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் தான் மாணவர்களுக்கு பள்ளியில் வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர்கள் தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கு வந்து பாடம் பயிலும் முறையை மறந்து விட்டிருந்தனர். இதனால் மாணவர்களுக்கு கற்றல் இழப்புகள் ஏற்படுவதாக ஆய்வின் மூலம் அறியப்பட்டு விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அரசு போதிய ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது பள்ளிகளை நேரடியாக நடத்தி வருகிறது.
UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – ESE நேர்காணல் தேதி வெளியீடு !
Exams Daily Mobile App Download
அனால், தற்போது தமிழகத்தில் கொரோனா, டெங்கு காய்ச்சல், ஸ்வைன் ஃப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல் என வரிசையாக பலவிதமான காய்ச்சல்கள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவை அதிகமாக பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. , குறிப்பாக,பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கலந்து தேர்வுகள் நடத்தப்பட்டு, கலந்து தேர்வுக்கான விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், காய்ச்சல் பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பதற்றத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பதில் அளிக்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது. முதல்வர், சுகாதாரத் துறை மற்றும் துறை அதிகாரிகளுடன் கலந்தோசித்து தான் உரிய முடிவெடுக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்