தமிழக மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு.. 58,000 காலிப்பணியிடம் நிரப்பு அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் மின்வாரிய துறை ஊழியர்கள் நீண்ட நாட்களாக அரசிடம் வைத்து வரும் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் அவர்கள் அரசுக்கு வலிறுயுறுத்தியுள்ளார்.
முக்கிய கோரிக்கைகள்
தமிழகத்தில் மின்வாரிய துறையில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஊழியர்கள் பணிச்சுமையில் தவிர்த்து வருகின்றனர். அதனால் மின்வாரிய துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் அவர்கள் அரசுக்கு வலிறுயுறுத்தியுள்ளார்.
அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
மேலும் இது தொடர்பான அறிக்கையில் இவர் தெரிவித்துள்ளதாவது, மின்வாரிய துறையில் சுமார் 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, 10% பணப்பயன்கள் ஆகியவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இதை தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
Exams Daily Mobile App Download