ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகை எப்போது? தமிழக அரசு அறிவிப்பு!!
ரேஷன் கார்டு இல்லாமல் ரூ. 6000 நிவாரணத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது நிவாரணத் தொகை வங்கி கணக்கில் வந்து சேரும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நிவாரணத் தொகை:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6000 வழங்க தமிழக அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. மேலும், ரேஷன் கார்டு இல்லாதவர்களும் நிவாரணத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 5.5 லட்சம் மக்கள் நிவாரணத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு, ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரண தொகை பெற விரும்பும் பொதுமக்களுக்கு ரொக்க பணமாக இல்லாமல் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரில் ஆய்வு – மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாடு வருகை!!
ஆனால், தற்போது வரையிலும் வங்கி கணக்கின் மூலமாக ரூ. 6000 நிவாரணத் தொகை பொது மக்களை சென்றடையாத நிலையில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.