வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரில் ஆய்வு – மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாடு வருகை!!

0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரில் ஆய்வு - மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாடு வருகை!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரில் ஆய்வு - மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாடு வருகை!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் நேரில் ஆய்வு – மத்திய நிதி அமைச்சர் தமிழ்நாடு வருகை!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாளை தூத்துக்குடி வரவிருக்கிறார்.

வெள்ளம்:

தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணத்தினால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய உடைமைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டதால் தற்போது வரையிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்தது.

மீண்டும் தனி குடித்தனம் செல்லும் ஸ்ருதி ரவி.. அழுது புலம்பிய விஜயா – “சிறகடிக்க ஆசை” அப்டேட்!

இதனிடையே, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை இயற்கை பேரிடர் சீற்றமாக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாளை மறுநாள் தூத்துக்குடி வரவிருக்கிறார். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் தமிழக அரசுக்கு தேவையான நிதி உதவி மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!