தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை எப்போது? முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் பண்டிகை:
தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை அனைத்து தரப்பு மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் பொங்கல் வைக்க தேவையான பொருள்கள், கரும்பு, மற்றும் நிவாரண தொகை வழங்கப்படும். மேலும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. இந்த அரசாணை வெளியாகாமல் விசைத்தறி நெசவாளர்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களுக்கு பொங்கலுக்கு தலா 1.80 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும். அதில் தலா 30 லட்சம் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ளவை விசைத்தறி மூலம் தயாரிக்கப்பட வேண்டும்.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – அறிவிப்பு வெளியீடு
Exams Daily Mobile App Download
வேட்டி சேலைகள் தயாரிக்கும் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டால் தான் பொங்கலுக்குள் தயாரித்து முடிக்க முடியும். வழக்கமாக ஆண்டுதோறும் வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணை ஜூன் மாதம் வெளியிடப்படும், ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆன நிலையில் அரசாணை வெளியிடப்படாததால், நடப்பாண்டில் தங்களுக்கு வேலை கிடைக்காதோ? என்ற ஐயம் நெசவாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.