மெட்ரோ ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் – அறிவிப்பு வெளியீடு!
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அனைத்து பயணிகளும் கடைபிடிப்பதில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் முகக்கவசம் அணியாத பயணிகளை திருப்பி அனுப்பி வருகிறது.
முகக்கவசம்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,408 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,928 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்த் தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் சுகாதாரத்துறை தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 டோஸ் தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக் கவசம் கட்டாயம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை அனைத்து பயணிகளும் கடைப்பிடிப்பது இல்லை. சிலர் மட்டுமே முகக் கவசம் அணிகின்றனர்.
பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை
Exams Daily Mobile App Download
தற்போது டிக்கெட் வாங்கி விட்டு செக்கிங் பாயிண்ட் வழியாக உள்ளே நுழையும் போது முகக்கவசம் அணியாதவர்களை ரயில்வே நிர்வாகம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். அதனால் பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தவிர்த்து பிற வழிகளை தேர்வு செய்கின்றனர். மேலும் பயணிகள் மாஸ்க் அணியாமல் வரும் பயணிகள் திரும்பி அனுப்பபடுவதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதனால் மெட்ரோ ரெயில் நிர்வாகமே கவுண்டர்களில் மாஸ்கை விற்பனை செய்யலாம் அல்லது இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.