இனி WhatsApp செயலியை இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தலாம்? விரைவில் புதிய அம்சம்!
வாட்ஸ் அப் பயனர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிவித்து வருகிறது. தற்போது அந்த வகையில் வாட்ஸ் அப் பயனர்கள் இன்டர்நெட் வசதி இன்றி செயலியை பயன்படுத்தும் வகையில் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் பரிமாற மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். இந்த செயலி மக்கள் மத்தியில் இன்றியமையா இடத்தை பிடித்து வருவதால் மிக அதிக அளவிலான பயனர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து தனது தளத்தை மேம்படுத்தி பல அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அம்சமாக மல்டி டிவைஸ் என்னும் அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் 25% RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
இந்த அம்சமானது பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கை கூடுதலாக 4 சாதனங்கள் என ஒரே நேரத்தில் 5 சாதனங்களில் பயன்படுத்த முடியும். மேலும் இந்த அம்சத்தின் முதல் பீட்டா பதிப்பு வாட்ஸ் அப் வெப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அம்சமானது பயனர்களுக்கு ஆரம்பத்தில் செயல்திறன் மற்றும் தரத்தில் சில சிக்கல்கள் இருக்கும் என்றும் படிப்படியாக இந்த சிக்கல்கள் அனைத்தும் சரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்று பயனர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். ஆனால் இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்கள் செயலியை இன்டர்நெட் சேவை இன்றி பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பயனர்கள் மல்டி டிவைஸ் அம்சம் பயன்படுத்துவதன் மூலம் இணைக்கப்பட்ட சாதனங்களின் பிரதான சாதனத்தில் இன்டர்நெட் வசதி இல்லாமல் செயல்படும் என்று கூறப்படுகிறது.
Gopalakirshna