பான் கார்டு பற்றி தெரிந்த பலருக்கும் ப்ரான் கார்டுகள் குறித்து தெரிய வாய்ப்பு இல்லை. ப்ரான் கார்டுகள் என்றால் என்ன என்பது குறித்து கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ரான் கார்டுகள்:
ஆதார் கார்டு போன்ற ஒரு முக்கியமான ஆவணம் தான் பான் கார்டு. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடந்தோறும், தங்களது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், வருடத்துக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்யவும் பான் கார்டு கட்டாயம் தேவை. அதேபோல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பவும் பான் கார்டு அவசியமானதாகும். இத்தனை முக்கியமான பான் கார்டு ஆனது வருமான வரித்துறையினரால் வழங்கப்படுகிறது.
பான் கார்டு பற்றி தெரிந்த பலருக்கும் ப்ரான் கார்டுகள் குறித்து தெரிய வாய்ப்பு இல்லை. ப்ரான் கார்டுகள் என் பி எஸ் (NPS) என்ற தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள், ஓய்வூதிய பணப்பலன்களுக்கு உரிமை கோர உதவி புரிகிறது. இந்த ப்ரான் கார்டுகள் ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடையது. இந்த கார்டுகளில் 12 இலக்க எண்கள் கொண்டிருக்கும். ப்ரான் கார்டுகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.