IT நிறுவன ஊழியர்களுக்கு WFH அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!
பெங்களூரில் அதிகமான கன மழை பெய்து வருவதன் காரணமாக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஐடி நிறுவனங்கள் WFH முறையை தொடர திட்டமிட்டுள்ளது.
WFH திட்டம்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக தெருக்கள் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும், பல பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் இருந்து நகர முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பெங்களூரில் வேலை செய்து வரும் ஊழியர்களும் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஐடி நிறுவனங்கள் பெங்களூரின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தங்களது ஊழியர்களுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் மற்றும் விப்ரோ நிறுவனம் தற்போதைக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் படியான திட்டத்தை அறிவித்துள்ளது.
மத்திய அரசின் JEE & NEET தேர்வு ஒன்றிணைப்பு? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!
மேலும் டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெங்களூரில் வேலை செய்து வரும் ஊழியர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் அவர்களின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் மேலும், தகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட இருக்கிறோம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் பெங்களூரில் பெய்துவரும் கனமழைக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக வடிகால் மேம்பாட்டிற்கு ரூபாய் 1500 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்