தமிழக ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் – முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு!!

0
தமிழக ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் - முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு!!
தமிழக ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் - முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு!!
தமிழக ஆவண எழுத்தர்களுக்கு நல நிதியம் – முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பு!!

தமிழக பதிவு துறை ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நல நிதியத்தை தொடக்கி வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அறிவிப்பாக மட்டும் இருந்து வந்த நல நிதியகத்திற்கு மு.க.ஸ்டாலின் செயல் வடிவம் கொடுத்துள்ளார்.

நல நிதியகம்:

தமிழக பத்திர பதிவு துறையில் உள்ள ஆவண எழுத்தர்களுக்கு அரசால் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த உரிமம் பெறும் முறையில் கடந்த மாதம் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதாவது ஆவண எழுத்தர்களுக்கு என்று சிறப்பு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டு அதனை அடிப்படையாக வைத்து உரிமம் வழங்க உத்தரவிடப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

இந்த தேர்வு குறித்த வழிமுறைகளை பதிவுத்துறை தலைவர்களே தீர்மானித்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று பதிவு துறை ஆவண எழுத்தர்களுக்கு என்று நல நிதியம் தொடங்கப்பட்டுள்ளது. 2021 – 2022ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டபடி இன்று தலைமையகத்தில் முதல்வர் தொடங்கி வைத்து உறுப்பினர்கள் அட்டையை வழங்கினார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 50% அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு -15 நாட்களில் மாணவர் சேர்க்கை!

Exams Daily Mobile App Download

இதன் கீழ் ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனமுற்றோர்களுக்கு 1 லட்சம் உதவித்தொகையும், இயற்கை மரணம் மற்றும் பிற உடல் ஊனங்களுக்கு உதவித் தொகையாக மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20,000 வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!