தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 50% அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு -15 நாட்களில் மாணவர் சேர்க்கை!
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் 50% அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி:
தமிழக அரசின் முதுகலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த நடவடிக்கை பணிகள் நீட் தேர்விற்கு பிறகு தொடங்கப்பட்டது. ஆனால் 2020ம் ஆண்டு வழங்கப்பட்ட அரசின் ஆணையின் படி, 50% அரசு மருத்துவர்கள் இப்படிப்பிற்கு இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த இட ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அந்த மனுவில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் 50% இடஒதுக்கீடு காரணமாக திறமை வாய்ந்த தனியார் மருத்துவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தனர். இதனால் மருத்துவ படிப்பிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை – டிச.5 காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை அப்டேட்!
Exams Daily Mobile App Download
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின், அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பின் 50% இட ஒதுக்கீடு அரசாணை செல்லுபடியாகும் என்றும், 15 நாட்களில் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்றும், வழக்கின் முழுமையான விசாரணை நீதிமன்றத்தின் குளிர் கால விடுமுறைக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று கூறி இடைக்கால அனுமதி அளித்துள்ளனர்.