வார இறுதி பொது முடக்கம் ரத்து, இரவு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்குவதாகவும், தினசரி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி ஊரடங்கு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கொரோனா புதிய பாதிப்புகளை கணக்கில் கொண்ட நிர்வாகம், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு ஊரடங்கு உத்தரவு தினசரி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை அமலில் இருக்கும் எனவும் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி 55% ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அருண்குமார் மேத்தா பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாவட்டங்களிலும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் தளர்வு நேரங்களில் வணிகங்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அதிகபட்சமாக 25 பேர் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் நிர்வாக பணிகளுக்காக மட்டுமே திறந்திருக்கும் எனவும், அதில் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த துணை கமிஷனர்கள் கொரோனா புதிய பாதிப்புகளின் விகிதத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் தினசரி 100 க்கும் குறைவான புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை ஒரு இலக்கத்துக்கும் கீழ் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.