தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதால் பெரும்பான்மையான மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. தற்போது ஈரோடு, சென்னை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. மேலும் இன்று இந்திய வானிலை மையம் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
அதன்படி சில இடங்களில் அதிகபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. அதனால் தமிழகத்திலும் வெப்ப அலை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கரூர், திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download