ஆரஞ்சு அலர்ட்.. தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை – இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை:
தமிழகம் முழுவதும் மிக அதிக அளவில் நடப்பு ஆண்டு மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக மழை பொழிவு உள்ளதால் அணைகளில் நீர் கொள்ளளவு முழுவதுமாக நிரம்பி வருகிறது. இதனால் நடப்பு ஆண்டில் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனை வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறம், அதிக மழை காரணமாக பயிர்களில் நீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இந்தியாவில் எளிதாகும் பண பரிமாற்றம் – டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தமிழகம் புதுச்சேரிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இந்த கனமழை நவம்பர் 5ம் தேதி வரை தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வானிலை அறிவிப்பிற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.