RBI-இன் அதிரடி நடவடிக்கை.. இந்தியாவில் எளிதாகும் பண பரிமாற்றம் – இன்று முதல் டிஜிட்டல் கரன்சி!
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (நவ.01) நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சி சோதனை முறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி:
வெளிநாடுகளில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடும் செலவை குறைவுக்கவும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார். அதன்படி இன்று மத்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளிலும் தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா உள்ளிட்ட 9 வங்கிகளில் சோதனை முறையில் ஜிட்டல் கரன்சி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை மத்திய, மாநில அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனை போன்றவற்றில் பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. 7வது முறையாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை – மக்கள் நிம்மதி!
Follow our Instagram for more Latest Updates
தற்போது இது சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை பொறுத்து அரசு பத்திரங்களை தவிர்த்து பிறவற்றிலும் டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டிற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல டிஜிட்டல் நாணயத்தின் சில்லரை பயன்பாடும் ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும். இந்த டிஜிட்டல் கரன்சியால் பண பரிமாற்றம் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.