மக்களே உஷார்.. மோசடி கும்பல்களின் புதிய யுக்தி – தமிழ்நாடு மின்சார வாரியம் விடுத்துள்ள எச்சரிக்கை!
மின் கட்டணம் தொடர்பாக நூதன முறையில் மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடும் நோக்கில் டான்ஜெட்கோ ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை:
நாளுக்கு நாள் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் மக்களிடம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டான்ஜெட்கோ எச்சரிக்கை பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்றிரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்பது போன்றும் கூடுதல் விவரங்களுக்கு குறிப்பிட்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் குறுந்தகவல் வந்தால் வாடிக்கையாளர்கள் அதை புறக்கணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அந்த குறுந்தகவலின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி.. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
எனவே இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை நம்பாது அவைகளை புறக்கணித்து விழிப்புணர்வோடு இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் மின் இணைப்பின் நிலை மற்றும் மின் கட்டண தகவல் குறித்த விவரங்களுக்கு https://tangedco.org என்னும் அதிகாரப்பூர்வ முகவரியை பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை பெரும் வாடிக்கையாளர்கள் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்