அஞ்சல் அலுவலக திட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டுமா? இந்த திட்டத்தை தேர்வு செய்து பயனடையுங்க!
அஞ்சல் அலுவகத்தில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ள போதிலும், மக்கள் தங்கள் வசதிக்கு தகுந்த பலன்களை தேர்வு செய்து முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பிஓஎம்ஐஎஸ் திட்டம் குறித்த விவரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அஞ்சலக திட்டம்:
தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு போன்று அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்குகள் தொடங்கவும், கணக்கில் இருந்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ATM போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத்திட்டமான பிஓஎம்ஐஎஸ் திட்டத்தில் அதிகபட்சமாக பயனர்கள் 4.5 லட்சம் தொகை முதலீடு செய்ய முடியும், அதே நேரத்தில் நீங்கள் கூட்டு கணக்கில் மொத்தமாக 9 லட்சத்தை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் 6.7% வட்டி விகிதமானது அளிக்கப்படுகிறது. முதிவு காலத்திற்கு முன்னதாக கணக்கை முடிக்க நினைக்கும் போது மொத்த தொகையில் இருந்து 2% பணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.
மத்திய அரசின் கல்வி & வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு!
Exams Daily Mobile App Download
மேலும், 4.5 லட்சம் தொகைக்கு அதிகபட்ச முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் பிறகு மாதம் ரூ.2,512 உங்களுக்கு அளிக்கப்படும். இதனால் முதிர்வு காலத்தின் இறுதியில் உங்களின் தொகை ரூ, 6,00,720 ஆக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.