Tokyo Olympics 2020 Wrestling : காலிறுதியில் வினேஷ் போகட் அதிர்ச்சி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த பிரிவில் பதக்கத்துக்கான எதிர்பார்ப்புகளுடன் அனைவரும் காத்திருந்த நிலையில், காலிறுதி வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட்.
மல்யுத்த போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சில முக்கியமான போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற இருந்தது. அந்த வகையில் இந்தியாவுக்கான மற்றுமொரு பதக்கத்தை உறுதி செய்வதற்கான காலிறுதி போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் அதிர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளார். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற சாதனை பெண்மணி வினேஷ் போகட் ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை பெறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
கேரளாவில் இருந்து தமிழகம் வர ‘இது’ கட்டாயம் – இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்!
இதனிடையே காலிறுதிக்கு தகுதியான அவர் இன்று (ஆகஸ்ட் 5) காலை நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் பெலாரஸ் நாட்டை வனேசா கலாட்ஜின்ஸ்காயா உடன் மோதினார். இப்போட்டியின் இறுதியில் 3-9 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று தனது அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். எனினும் வனேசா கலாட்ஜின்ஸ்காயா மல்யுத்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால் இந்திய வீராங்கனை வினேஷுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் இடைவேளையில் வினேஷ் போகட் 2-5 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தார். அதன் பின்னர் வினேஷின் தாக்குதலை முறியடித்த கலாட்ஜின்ஸ்காயா 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனிடையே ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தஹியா இறுதி சுற்றுக்குள் நுழைந்ததன் மூலம் இந்தியாவுக்கு நான்காவது ஒலிம்பிக் பதக்கம் உறுதியாகியுள்ளது. மற்றொரு மல்யுத்த வீரர் தீபக் புனியா 86 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதியாகியுள்ளார்.