விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – புதிய நேரத்தில் ஒளிபரப்பு!
விஜய் டிவியில் விரைவில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இனி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
நேர மாற்றம்
தமிழ் சின்னத்திரையில் கல்லூரி காலம், காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப எடுத்துரைப்பது விஜய் டிவியின் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல். இந்த சீரியலில் அப்பாவை எதிர்த்து ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா என்ற பெண் காலப்போக்கில் கல்லூரி பேராசிரியர் சூர்யாவை காதலிக்க துவங்குகிறார். இவர்களது காதல் கை கூடுமா என்பதன் பின்னணியை வைத்து இந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?
விஜய் டிவியில் கிட்டத்தட்ட 260 எபிசோடுகளை எட்டியிருக்கும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் சூர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் தர்ஷன் சமீபத்தில் இந்த சீரியலை விட்டு விலகினார். ஏற்கனவே வெண்ணிலா மற்றும் சூர்யா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், நடிகர் தர்ஷனின் திடீர் விலகல் சீரியலை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. என்றாலும் தற்போது சூர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சுவாமிநாதன் என்பவரும் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் செய்த சாதனை – சந்தியா & சரவணனுக்கு கேக் வெட்டி ஊட்டிய சிவகாமி!
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் நேர மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இனி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது கவனிக்கத்தக்கது.