பிக் பாஸ் நிகழ்ச்சியால் முக்கிய சீரியலுக்கு முழுக்கு போட்ட விஜய் டிவி – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் முக்கிய சீரியல் ஒன்றை விஜய் டிவி தற்காலிமாக நிறுத்த உள்ளது. இதனால் ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.
சீரியல் நிறுத்தம்:
ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது ஏதாவது 2 சீரியல் முடியும். அதே சமயம் ஒரு சில சீரியல்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் வழக்கம் போல தொடரப்படும். அவ்வாறு தான் கடந்த ஆண்டு செந்தூர பூவே சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே போல இந்த வருடம் தற்காலிமாக நிறுத்தப்படும் தொடர் தான் பாரதிதாசன் காலனி. பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளத்தை கொண்டு கடந்த ஜூன் மாதம் இந்த சீரியல் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக தற்போது இந்த சீரியல் சென்று கொண்டிருந்தாலும் TRP-யில் சற்று பின்னடைவை இந்த சீரியல் சந்தித்துள்ளதால் விஜய் டிவி இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐஸ்வர்யா பேசியதால் கோவப்பட்ட மீனா, இலவச பிரியாணியால் கதிர் கடைக்கு வந்த கூட்டம் – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் பாரதிதாசன் காலனி தொடர் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் ஈரமான ரோஜாவே 2, மௌன ராகம் ஆகிய சீரியல்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியால் நேர மாற்றத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.