ஐஸ்வர்யா பேசியதால் கோவப்பட்ட மீனா, இலவச பிரியாணியால் கதிர் கடைக்கு வந்த கூட்டம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா பேசியதை நினைத்து மீனா ஜீவாவிடம் சண்டை போடுகிறார். பின் நிலம் பதிவு செய்ய ஏற்பாடுகளை பற்றி ஜீவா விசாரிக்கிறார். மறுபக்கம் கதிர் இலவச பிரியாணி கொடுக்க அதனால் கூட்டம் பயங்கரமாக வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் பணம் கொடுப்பதை பற்றி ஐஸ்வர்யா பேசியதால் மீனாவிற்கு கோவம் வருகிறது. ரூமிற்குள் வந்து ஜீவாவிடம் அவள் என் அப்பாவை பற்றி பேசுகிறாள் நீயும் சேர்ந்து பேசுகிறாய் என கேட்கிறார். ஜீவா சும்மா விளையாட்டுக்கு பேசியதாக சொல்ல, உடனே மீனா என் அப்பா பணத்தை கொடுத்துவிடுவார் என சொல்கிறார். நீ ஏன் சண்டை போடுகிறாய் என ஜீவா சொல்ல, அவங்க பேசியதால் தான் நான் பேசுகிறேன் என மீனா சொல்கிறார். பின் ஜீவா எதுவும் பேசாமல் கிளம்பி செல்கிறார். மீனா அவள் பேசினால் நீ ஏன் சிரித்தாய் அதனால் தான் எனக்கு கோவம் வந்தது என சொல்கிறார்
மறுபக்கம் தனத்திற்கு ஒருவர் போன் செய்து பார்லருக்கு வழி கேட்கிறார். தனம் வழி சொல்ல, ஐஸ்வர்யா அவருக்கு பேசியல் செய்துவிடுகிறார். பின் ஜீவாவிற்கு மீனா டீ போட்டு கொடுக்க, அவர் குடித்துவிட்டு பாத்ரூம் போக வருகிறார். அப்போது ஐஸ்வர்யா பேசியல் செய்து கொண்டிருக்க ஜீவா எதுவும் பேசாமல் கிளம்புகிறார். மீனா என்ன என கேட்க பேசியல் செய்வதாக சொல்கிறார். உடனே மீனாவிற்கு கோவம் வந்து தனத்தை அழைத்து ஆட்கள் நடந்து செல்ல முடியாமல் இப்படி பார்லர் நடத்துவது சரி இல்லை என மீனா சொல்ல ஆனால் தனம் எதுவும் பேசாமல் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்
பின் கதிர் கடையில் இலவச பிரியாணி கொடுக்க அனைவரும் போன் செய்து ஓசியில் சாப்பிட வர சொல்கிறார்கள். பார்வதி அதை பார்த்து கடுப்பில் இருக்கிறார். கதிர் கேட்பவர்களுக்கு எல்லாம் தாராளமாக கொடுக்கிறார். கதிர் நடந்து கொள்வதை பார்த்து முல்லைக்கு கோவம் வருகிறது. அனைவரும் நன்றாக சாப்பிட பார்வதி வெளியே இருக்கும் பலகையை எடுக்க சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தியை தனம் சாப்பிட கூப்பிட ஜீவா வந்ததும் சாப்பிடுகிறேன் என மூர்த்தி சொல்கிறார். ஆனால் தனம் அவன் வர நேரமாகும் என சொல்கிறார். பின் ஜீவா வர இடம் பதிய தேவையான விஷயங்களை கேட்டு வந்ததாக சொல்கிறார்,
கோபியை நினைத்து வருத்தப்படும் ராமமூர்த்தி, பாக்கியாவிடம் கேள்வி கேட்கும் ராதிகா – இன்றைய எபிசோட்!
மூர்த்தி ஜீவாவிற்கு வேலை கொடுக்க, மீனா ஜீவா ஒரே ஆளாக எப்படி வேலை பார்ப்பான் என நினைக்கிறார். பின் கதிர் கடையில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்க அண்ணாச்சி வந்து என்ன ஆச்சு என பார்க்கிறார். அப்போது இலவசமாக பிரியாணி கொடுப்பதாக சொல்ல, இவனுக்கு என்ன பைத்தியம் பிடித்து இருக்கிறதா என கேட்டு உள்ளே சென்று முல்லையிடம் இப்படி இலவசமாக பிரியாணி கொடுத்தால் என்ன ஆகும் என கேட்கிறார். உடனே முல்லை கதிரை நினைத்து வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது,
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்