Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி – நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!

0
Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி - நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!
Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி - நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!
Vijay TV Big Boss Promo || சாப்பிடாமல் அடம் பிடித்த ராஜு, சமாதானம் செய்த பாவ்னி – நெகிழ்ச்சியான கிளிப்ஸ்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பல முறை விவாதங்கள் மிகவும் பெரிய அளவில் நடந்துள்ள போதிலும், நேற்றைய விவாதம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு நேர்மாறாக இன்று போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

கடந்த 4 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வரும் போதிலும், ஒவ்வொரு முறையும் ஒரு புதிய விஷயம் நம்மை இன்னும் ஆச்சர்யப்படுத்தி தான் வருகிறது. அந்த வகையில், இந்த முறை போட்டியாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பித்த சமயத்தில் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடனும், ஒற்றுமையாகவும் பழகி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல போட்டிகள் நடக்கும் போதும் சரி, மற்ற நேரங்களிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில், சண்டையிட்டு வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே பாவ்னி மற்றும் அபிநய் இருவரின் நட்பையும் பற்றி சில கிசுகிசுப்புகள் தொடங்கியது.

பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி பாஸ் கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!!

இதில், பாவ்னியே அபிநயிடம் சென்று என்னிடம் காட்டும் பாசத்திற்கு அர்த்தம் என்ன என்று கேட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அதன் பிறகு கடந்த வாரம் நடந்த போட்டியில், ராஜு,அபிநயிடம் நீ பாவ்னியை காதலிக்கிறாயா என்று கேட்டது சபை நாகரீகம் அற்ற செயல் என்று பலரும் விமர்சிக்கும் அளவிற்கு சென்றது. தொடர்ந்து இது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் சிபி இவர்களை பற்றி கூற அதற்கு பாவனி மிகவும் வருத்தத்துடன் கூறி அழுதது அனைவரையும் பாதித்தது.

தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை ‘இது’ கட்டாயம் – அரசு உத்தரவு!

அரசியல் கட்சிகள் டாஸ்கில் ஒவ்வொரு குழுவும் அடுத்த குழுவை மாறி மாறி தாக்கி வருவது, போட்டியை தாண்டி வேறு எங்கோ செல்வது போல் உள்ளது. நேற்று நடந்த சண்டையினால் பாவனி மிகவும் மனக்கவலையில் இருக்க அனைவரும் ஒன்றாக சாப்பிடலாம் என்று சஞ்சீவ் கூறியதை நினைத்து பாவனி அமீரிடம் கூறுகிறார். அதற்கு சஞ்சீவ் அதை சொன்னது ராஜு தான் என்று கூறியவுடன், பாவ்னி ராஜுவிடம் சென்று சமாதானம் செய்து, மற்ற போட்டியாளர்களிடமும் சமாதானம் செய்து கொள்கிறார். இதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!