இரக்கமே இல்லாமல் ஹேமாவை கொல்ல துணிந்த வெண்பா..பரிதவிக்கும் கண்ணம்மா – வைரல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவை வெண்பா ஆட்கள் வைத்து கடத்திவிட்ட நிலையில் கண்ணம்மா ஹேமாவை தேடி எல்லா இடங்களுக்கும் அலைகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா ப்ரோமோ:
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதில் எதிர்பாராத திருப்பமாக ஹேமா தனது அப்பாவை தேடி செல்கிறார். அப்போது குறுக்கே வெண்பா வர, என்ன ஹேமா இந்த பக்கம் என கேட்கிறார். அப்போது ஹேமா நான் என் அப்பாவை தேடி செல்கிறேன் என சொல்ல, உடனே வெண்பா நக்கலாக உன் அப்பா யார் என உன் அம்மாவிற்கே தெரியாது என சொல்கிறார். அதை கேட்டு கோவப்பட்ட ஹேமா வெண்பா மண்டையை உடைத்துவிட்டு கிளம்புகிறார்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் ஹேமாவை கடத்த சொல்லி வெண்பா ஆட்களை ஏற்பாடு செய்கிறார். அவர்கள் ஹேமாவை கடத்திவிடுகின்றனர். மறுபக்கம் கண்ணம்மா ஹேமாவை காணாமல் தேட, ஹேமாவை ஆட்கள் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருக்கின்றனர். அப்போது வெண்பா ஹேமாவை கொல்ல சொல்லி அந்த ஆட்களிடம் சொல்கிறார். ஆனால் அந்த ஆட்கள் ஹேமாவை கொல்லாமல் பெண் குழந்தை என்பதால் விற்று விடலாம் என சொல்கிறார்கள். மேலும் ஆட்களை வர வைத்து ஹேமாவை விற்று விடுகின்றனர்.
கோமாவில் இருந்து மீண்டு வந்த சீரியல் நடிகர்.. நடந்தது என்ன? அவரே சொன்ன விளக்கம்!
Exams Daily Mobile App Download
பின் ஹேமாவை ஒரு கன்டைனரில் ஏற்றி அழைத்து செல்ல, கண்ணம்மா அஞ்சலி அகில் என அனைவரும் ஹேமாவை தேடி அலைகின்றனர். அப்போது கண்ணம்மா ஹேமாவை இப்போதே கண்டுபிடிக்க வேண்டும் என சொல்லி அருகே இருக்கும் கோவிலில் வேண்டி கொள்கிறார். மேலும் கண்ணம்மா அருகே தான் அந்த கன்டைனர் இருக்கிறது. கண்ணம்மா ஹேமாவை கண்டுபிடிப்பாரா என்பது எல்லாம் சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்டாக இருக்க போகிறது.
இரக்கமே இல்லாமல்
இந்த சீரியல் இயக்குனர்தான்
அனைவரையும்
கொல்கிறார்.