ஈஸ்வரிக்கு ஆப்பு வைக்க காத்திருக்கும் ராதிகா, மாட்டிக் கொண்டு முழிக்கும் கோபி – “பாக்கியலட்சுமி” ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தா திருமணத்தை பாக்கியா நடத்தி வைத்ததால் ஈஸ்வரி அவர் மீது கோவப்பட்டு கோபி உடன் சென்றுவிடுகிறார். ஈஸ்வரி தொல்லை தாங்க முடியாமல் ராதிகா கோவப்பட்டு ஈஸ்வரியை எதிர்ப்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரசியமான திருப்பங்கள் வந்துவிட்டது. எழில் அமிர்தா திருமணத்தை ஈஸ்வரியை எதிர்த்து பாக்கியா செய்து வைக்கிறார். அதனால் ஈஸ்வரிக்கு பாக்கியா மீது பயங்கர கோவம். அவர் பாக்கியா மீது உள்ள கோவத்தில் கோபி செய்த தவறை மறந்துவிடுகிறார். அது மட்டுமில்லாமல் பாக்கியாவால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பதால், அவர் வாடகை வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா.. ஆதிரையின் திருமணம் இவர் கூடத்தான் – வெளியான அப்டேட்!
ஆனால் ஈஸ்வரி கோபியிடம் பேசி பார்க்கலாம் என நினைத்து, ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கே கோபியிடம் வீட்டை விற்க கூடாது என சொல்கிறார். மேலும் ராமமூர்த்தி தன்னுடைய சொத்து முழுவதையும் உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன் என சொல்கிறார். ஆனால் கோபி அதை கேட்காமல் பாக்கியாவிடம் வந்து சண்டை போடுகிறார். உடனே அவரை வீட்டை விட்டு போக சொல்ல, அவர் மட்டும் வீட்டை விட்டு கிளம்புகிறார். பின் கோபி ராதிகாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
Follow our Instagram for more Latest Updates
வீட்டிற்கு வந்த ராதிகா ஈஸ்வரி கோபியின் கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் இருக்கிறார். மேலும் பாக்கியா இவர்களிடம் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் என நினைத்து பார்க்கிறார். ஆனால் அவர் பாக்கியா போல பொறுமையாக இல்லாமல் கோபியிடம் அம்மா முக்கியமா இல்லை நான் முக்கியமா என கேட்டு சண்டை போட, ஈஸ்வரிக்கு பெரிய சிக்கல் வர இருக்கிறது. இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download