கோபிக்கு வந்தாச்சு புது வில்லி.. இனி நடக்க போவது இது தான் – “பாக்கியலட்சுமி” அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மற்றும் பழனியை கோபி சந்தேகப்பட்டு பேச, ராதிகா பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்க போகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எல்லா கஷ்டங்களையும் தாண்டி குடும்பத்தின் சந்தோஷத்திற்காக போராடி வருகிறார். ஆனால் ஈஸ்வரியும், கோபியும் அவர்களுக்கு தடையாக இருக்கின்றனர். இந்நிலையில் பழனிசாமி பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்க, அதை கோபி சந்தேகப்படுகிறார். அவர் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையை பெரிதாக்கி பாக்கியாவை வீட்டை விட்டு துரத்த நினைக்கிறார்.
IND vs AUS 3rd T20 – முதல் தோல்வியை தழுவிய இந்தியா!!
இந்நிலையில் கோபியிடம் இது என் வீடு என பாக்கியா திமிராக பேச, அவர் ராதிகாவிடம் நியாயம் கேட்கிறார். அப்போது ராதிகா பாக்கியாவிற்கு ஆதரவாக பேசுகிறார். பாக்கியா யாரிடம் பேசினால் உங்களுக்கு என்ன என ராதிகா கோபியிடம் கேட்கிறார். பாக்கியா தனி ஆள் என ராதிகா சொல்ல, கோபியால் எதுவும் பேச முடியாமல் போகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில், இனி வரும் எபிசோடுகளில் பாக்கியாவிற்கு துணையாக ராதிகா கோபியை பழி வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates