கரண்ட் பில்லை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பம், சண்டையிடும் எழில் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கரண்ட் பில்லை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பம், சண்டையிடும் எழில் செழியன் - இன்றைய
கரண்ட் பில்லை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பம், சண்டையிடும் எழில் செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கரண்ட் பில்லை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பம், சண்டையிடும் எழில் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை எழில் சத்தம் போட ஈஸ்வரி எழிலை திட்டுகிறார் உடனே தாத்தா ஈஸ்வரியை சத்தம் போடுகிறார். பின் வீட்டில் கரண்ட் பில் எடுக்க ஆள் வருகிறார். குடும்பத்தினர் கரண்ட் பில்லை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மறுபக்கம் எழில் செழியன் சண்டை போடுகின்றனர்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா பாக்கியாவை எல்லாத்துக்கும் காரணம் என்பது போல பேச உடனே எழில் இனியாவை சத்தம் போடுகிறார். அதை பார்த்த ஈஸ்வரி என்னடா குரல் அதிகமாகிறது. அவள் சின்ன பொண்ணு அவளுக்கு பிடிக்காதது நடக்கும் போது அவளுக்கு கோவம் வரும். எல்லாம் பெரிய ஆள ஆன பின் அவளுக்கு தெரிய வரும் என சொல்ல, உடனே தாத்தா ஈஸ்வரி எழில் இனியாவின் அண்ணன் அவளை திட்டும் உரிமை எல்லாம் அவனுக்கு இருக்கிறது. அவள் தான் பேச தெரியாமல் பேசுகிறாள் நீ அவளை கண்டிக்காமல் அவளை ஏற்றி விடுகிறாய் என சொல்ல, இனியா இந்த வீட்டில் ஏன் இப்படி சண்டை நடக்கிறது டாடி போன போது நிம்மதி எல்லாம் போய்விட்டது போல என எரிச்சலுடன் கிளம்புகிறார்

பின் தாத்தா பாக்கியாவிடம் இனியா சின்ன பெண் அவள் பேசியதை மனதில் வைத்து கொள்ளாதே என சொல்ல, நான் ஏன் வருத்தப்பட போறேன் இனியா என் மகள் என சொல்கிறார். உடனே ஈஸ்வரி உனக்கு என்ன வருத்தம் என கேட்க, தாத்தா ஈஸ்வரி ஏன் பாக்கியாவை திட்டுகிறாய் என கேட்கிறார். அப்போது இபி பில் கணக்கு எடுப்பவர் வருகிறார். பாக்கியா அவரிடம் அட்டையை கொடுத்து கணக்கு எடுக்க சொல்ல அவர் கணக்கு எடுத்துவிட்டு செல்கிறார். பாக்கியா பில் எவ்வளவு வந்துள்ளது என பார்க்க அதில் 17000 ரூபாய் வந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் செல்வி எவ்வளவு அக்கா என கேட்க 17000 ரூபாய் என சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்

எங்க வீட்டில் 4 ஏசி ஓடுவதாக சொல்ல பாக்கியா எனக்கும் ஆச்சர்யமாக தான் இருக்கிறது என பாக்கியா சொல்கிறார். ஒரு 10000 ரூபாய் வரும் என நினைத்ததாக சொல்ல ஈஸ்வரி உனக்கு எதுவும் தெரியாமல் நீ குடும்பம் நடத்தி இருக்கிறாய் என ஈஸ்வரி பாக்கியாவை குறை சொல்கிறார். பாக்கியா நானும் சில நாள் இபி பில் கட்டி இருக்கிறேன் என சொல்ல, தாத்தா நான் தான் இந்த வீட்டில் ஆம்பளை என்ற திமிரில் கோபி இருந்ததாக சொல்கிறார். உடனே செழியன் அப்பா இருந்த வரை செலவு எதுவும் தெரிய வராமல் அவரே கட்டிவிடுவார் ஆனால் இப்போது அப்படி இல்லை என சொல்கிறார். உடனே ஜெனி ஆண்டிக்கு நீ சொல்லி கொடுக்காதே அதெல்லாம் டூ மச் என சொல்கிறார்.

செழியன் அப்பா இருந்த வரை இதெல்லாம் பிரச்சனையாக இருந்தது இல்லை ஆனால் இப்போது குடும்பமே பேசும் அளவிற்கு ஆகிவிட்டது என சொல்கிறார். இப்படி பிரச்சனை வரும் என தெரிந்தால் அப்பாவை அனுப்பி இருக்கமாட்டியா என கேட்க உடனே எழில் தேவை இல்லாமல் பேசாதே என சொல்கிறார். அவர் செய்த செலவுகளை வைத்து அவர் செய்த தவறுகளை மறைக்காதே என சொல்ல, செழியன் அவர் செய்த நல்லதை மறைத்தால் நான் ஒப்புக் கொள்ளமாட்டேன் என சொல்கிறார். இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர். ஈஸ்வரி அதை பார்த்து கோபப்படுகிறார். தாத்தா இருவரும் அமைதியாக இருங்க என சொல்ல உங்க அப்பா போய்விட்டால் பொறுப்பாக இருப்பீங்க என நினைத்தேன் ஆனால் இப்படி சண்டை போடுறீங்க எனகேட்கிறார்.

ஈஸ்வரி இந்த வீட்டின் நிம்மதி போனதற்கு பாக்கியாவை காரணம் சொல்கிறார். தாத்தா பாக்கியாவிடம் இவங்க பேசியதை நினைத்து மனதை கெடுத்து கொள்ளாதே என சொல்கிறார். பாக்கியா எனக்கு இதெல்லாம் பழகிவிட்டது என சொல்கிறார். பின் செல்வி என்ன இருவரும் சண்டை போடுறாங்க என கேட்கிறார். ஜெனி என்னமோ அங்கிளை நீங்க வெளியே போக சொன்னது போல செழியனும் பாட்டியும் பேசுறாங்க. இதில் என்ன கொடுமை என்றால் அங்கிள் எந்த தவறும் செய்யாத மாதிரி பேசுறாங்க நீங்களே விவாகரத்து கொடுக்காமல் இருந்தால் அங்கிள் போக தான செய்வார் என்னமோ இப்படி பேசுவதாக சொல்ல, செல்வி எல்லாத்துக்கும் பணம் தான் காரணம் நீ அமைதியாக இருந்தால் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள் என செல்வி சொல்கிறார்

தமிழகத்தில் புதிய ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு – பதிவாளர் சுற்றறிக்கை!

பின் பாக்கியா உண்மை தெரியாதவர்களிடம் நாம பேசி பயன் இல்லை. நான் வீட்டை விட்டு வெளியே போன போது பொறுப்பில்லை என சொன்னார்கள் இப்போது நான் தான் காரணம் என சொல்கிறார். நான் என்ன செய்வது என கேட்க ஜெனி நீங்க சரியாக தான் இருக்கீங்க என சொல்கிறார். பின் பாக்கியா இந்த குடும்பத்திற்கு பணம் தான் தேவை அதுக்கு வழி செய்ய வேண்டும். அதை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என பாக்கியா சொல்கிறார். பாக்கியா பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சொல்ல செல்வி எப்படி சுலபமாகசொல்கிறாய் என கேட்கிறார். உடம்பில் தெம்பும் மனசில் வைராக்கியம் இருந்தால் நம்மால் பிழைக்க முடியும் என பாக்கியா சொல்கிறார். பின் ஜெனி செழியனிடம் நீ செய்வது சரி இல்லை ஆன்டியை இப்படி எல்லாம் பேசாதே உனக்கு அக்கறை இருந்தால் கரண்ட் பில் நீ கட்டு என சொல்கிறார். உடனே செழியன் என்னால் ஒரு பைசா கூட அதிகமாக கொடுக்க முடியாது என சொல்ல ஜெனி அதை கேட்டு கோபப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!